நம்மில் பெரும்பாலானோர் முகத்தின் அழகிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கைகள் மற்றும் கால்களை பராமரிப்பதற்கு தருவதில்லை.
நமது முகத்திற்கு அடுத்தபடி யாக மற்றவர்களின் கண்களுக்கு தெரிவது நமது கைகளும் கால்களும் தான்.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை நாம் பராமரிப்பது மிகவும் அவசியம்.
அந்த வகையில் நமது முதுமை தோற்றத்தை முதலில் வெளிப்படுத்துவது நமது கைகள்.
ஆனால் சிலருக்கு கைகளில் சின்ன வயதிலிருந்தே சுருக்கங்கள் வந்து அவர்களது தோற்றத்தை காட்டும்.
இந்த சுருக்கங்கள் காலம் முழுவதும் நீடித்திருப்பது அல்ல.
இந்த சுருக்கங்களை எமது வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்தே எளிதாக போக்கலாம்.
அந்த வகையில் இன்று தக்காளிப்பழம் பற்றி பார்ப்போம்.
பொதுவாக அனைவருடைய வீட்டிலும் தக்காளிப்பழம் சமையலுக்கு பயன்படுத்தப்படும்.
இவற்றுள் பல வகையான சத்துக்கள் நிறைந்துள்ளன.
மேலும் சர்ம அழகை மேம்படுத்த பெரிதும் உதவும்.
இந்த தக்காளியை சரிபாதியாக அரிந்து கொண்டு அவற்றை தங்களது கை மற்றும் கால்களில் தடவி சிறிது நேரம் மசார்ஜ் செய்து ஒரு 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின்பு குளிர்ந்த நீரால் கழுவ கை மற்றும் கால்களிலுள்ள கருமை நிறங்கள் மற்றும் சுருக்கங்கள் நீங்கி மிகவும் வெண்மையாக காட்சியளிக்கும்