கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வியமைச்சர் விளக்கம்!

0

தற்போது நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இதுவரை வெளியிடப்படவில்லை.

இதற்கமைய அழகியல் செய்முறை பரீட்சை நடத்தப்படாமல் இருப்பதே இதற்கு காரணம் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த பரீட்சைக்கு தோற்றிய 622,000 மாணவர்களில் 169, 000 பேர் அழகியல் செய்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

இவர்களுக்கான அழகியல் செயல்முறைப் பரீட்சை நடாத்தப்பட்டு அதன் புள்ளிகள் கிடைக்கப் பெற்றதும் ஒட்டுமொத்த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளையும் வெளியிட முடியும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply