இந்த டிப்ஸை Follow பண்ணா ஒரே வாரத்தில் கலர் ஆகலாம்..!

0

முகம் வெள்ளையாக தேவையான பொருட்கள்:
துவரம்பருப்பு – 5 தேக்கரண்டி
ரோஸ் வாட்டர்- தேவையான அளவு
கற்றாழை ஜெல்- தேவையான அளவு
பேஸ் பேக் செய்முறை:
முதலில் ஒரு கிண்ணத்தில் 5 தேக்கரண்டி பருப்பை சேருங்கள். பின் ஊறுகிற அளவிற்கு தண்ணீர் ஊற்றுங்கள். 3 மணி நேரம் ஊற வேண்டும். பிறகு ஊறிய பருப்பை அரைக்க வேண்டும். இதில் ரோஸ் வாட்டர் அல்லது காய்ச்சாத பால் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்து கொள்ள வேண்டும்.

அரைத்த விழுதை ஒரு காட்டன் துணியில் வைத்து வடிகட்டி சாற்றை மட்டும் எடுத்து கொள்ளவும். பின் இந்த சாற்றில் தேவையான அளவு கற்றாழை ஜெல்லை சேர்த்து கலக்க வேண்டும். இப்பொழுது முகத்தை வெள்ளையாக ஆக்க கூடிய கிரீம் கிடைத்துவிட்டது.

அப்ளை செய்யும் முறை:
தினமும் இரவு தூங்குவதற்கு முன் முகத்தை நன்றாக கழுவி கொள்ளுங்கள். பின் ஈரம் இல்லாமல் காட்டன் துணியை வைத்து முகத்தை துடைத்து கொள்ளுங்கள். பிறகு நாம் செய்து வைத்துள்ள பருப்பு பேஸ்ட்டை முகத்தில் அப்ளை செய்யுங்கள். இரவு முழுவதும் அப்படியே முகத்தில் இருக்கட்டும்.

காலையில் எழுந்து எப்பொழுதும் போல் முகத்தை கழுவி கொள்ளுங்கள். இது போல் தொடர்ந்து ஒரு வாரம் செய்து வாருங்கள் நீங்களே மாற்றத்தை காணலாம். முகம் கலர் ஆகிவிட்டது என்று அப்படியே விட்டு விட கூடாது. தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நிரந்தமாக சிவப்பு நிறம் வந்துவிடும். மேல் கூறப்பட்டுள்ள குறிப்பை பயன்படுத்தி வந்தால் உங்களை யாரும் பட்ட பெயர் வைத்து யாரும் கூப்பிடமாட்டார்கள்

Leave a Reply