தினமும் முகத்திற்கு அழகு சேர்க்க..!!

0

நம்முடைய முகமானது மிகவும் மிருதுவாக சருமத்தை கொண்டது. அதேபோல் முகத்திற்கு எதனை அப்ளை செய்தாலும் அது அப்படியே ஈர்க்கும் தன்மை கொண்டது. அவ்வாறு நாம் முகத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது நல்லது.

அடிக்கடி முகத்தில் கைகளை வைக்கக்கூடாது. அடிக்கடி முகத்தில் உங்களுடைய கைகளை வைத்தால் கையில் உள்ள அழுக்குகள், பாக்டீரியாக்கள் உள்ளது. ஆகையால் கைகளை வைத்தால் அதில் உள்ள கிருமிகளால் முகம் பாதிக்கப்படும். நாளடைவில் முகத்தில் பருக்கள், சிவப்பு தன்மை, கரும்புள்ளிகள் வரக்கூடும். அதனை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

வெளியில் சென்று விட்டுவந்தால் கை கால்களை கழுவிவிட்டு வருவது பழக்கம் அதேபோல் முகத்தை தண்ணீரால் கழுவிவிட்டு வருவது நல்லது.

அளவுக்கு அதிகமான மருந்து கிரீம்களை பயன்படுத்துபவர்கள் சிறிய வயதிலேயே முகத்திலுள்ள இயற்கை அழகை இழந்துவிடுவார்கள்.

உடலை மசாஜ் செய்வது போல் முகத்தையும் மசாஜ் செய்வது நல்லது காரணம் முகத்திற்கு இயக்கையாக கிடைக்கும் பொருட்களை கொண்டு மசாஜ் செய்வது நல்ல பலன்கள் கிடைக்கும். இப்படி செய்வதனால் இரத்த ஓட்டம் சீராகி முகம் பொலிவு போன்ற சருமம் கிடைக்கும்.

இயற்கையான முறையில் பொருட்களை கொண்டு முகத்திற்கு face பேக் போட்டுக்கொள்ளவும். அப்போது தான் முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி புதிய செல்கள் உருவாகும். இதனால் முகம் பொலிவாக இருக்கும்.

Leave a Reply