உடலுக்கு தேவையான அளவிற்கு தினமும் 2 லிட்டர் முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் அருந்தவும்.
நீர் சத்து அதிகமுள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை தினமும் அதிகளவு சாப்பிடவும்.
ஆடு இறைச்சி மற்றும் மாட்டிறைச்சி உட்கொள்வதை தவிர்த்து கொள்ளவும்.
வாழை தண்டில் தாதுப்பு அதிகளவு நிறைந்துள்ளதால் சிறுநீரக கற்களை கரைப்பதற்கு அதிகளவு உதவுகிறது. எனவே தினமும் உணவில் அதிகளவு வாழைத்தண்டு சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.
மேலும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை தவறாமல் உட்கொள்ளவும். உணவில் அதிகளவு உப்பு சேர்த்துக்கொள்வதை தவிர்த்து கொள்ளவும்.
மேலும் சிட்ரிக் அமிலம் நிறைந்துள்ள எலுமிச்சை ஜூஸ், ஆரஞ்சு, சாத்துக்குடி ஜூஸை அதிகளவு தினமும் அருந்தி வரவும்.