மூன்றே நாட்களில் கரும்புள்ளி நீங்க இதை செய்தால் போதும்..!

0

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு
தக்காளி
எலுமிச்சை சாறு – சிறிதளவு

முக சருமத்தில் உள்ள கரும்புள்ளியை போக்க முதலில் உருளைக்கிழங்கு மற்றும் தக்காளியை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். இதனை மிக்ஸி ஜாரில் பேஸ்ட் போன்று அரைத்து சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ளவும். அடுத்து அரைத்து வைத்துள்ளதை ஐஸ் ட்ரேயில் ஊற்றிவைக்கவும்.

ஐஸ் ட்ரேயில் ஊற்றிய பிறகு ஒரு இரவு மட்டும் ஃபிரீஸரில் வைத்தால் நன்றாக கட்டியான தன்மைக்கு வந்துவிடும். இந்த ஐஸ் கட்டியினை இரவு படுக்கைக்கு முன்பு முகத்தினை சுத்தம் செய்து விட்டு மசாஜ் போல் செய்யவேண்டும். இந்த டிப்ஸை பின்பற்றினால் முகத்தில் ஏற்பட்டு உள்ள கரும்புள்ளிகள் பருக்கள் மறைந்துவிடும்.

குறிப்பு: உருளைகிழங்கு மற்றும் தக்காளியில் இயற்கையான பிலீச்சிங் தன்மை இருப்பதனால் நம் முகத்தினில் உள்ள கரும்புள்ளி, இறந்த செல்களை நீக்கி முகத்தினை பொலிவுடன் வைத்திருக்கும். அதோடு முகத்தில் உள்ள கருவளையம் விரைவில் நீங்கிவிடும்.

Leave a Reply