பக்கவாதத்தின் அறிகுறிகள்..!!

0

பக்கவாதத்தின் அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிந்து மருத்துவ சிகிச்சை பெறுவது மிகவும் முக்கியமானது.

பக்கவாதத்தின் பெரும்பாலான அறிகுறிகள் மூளையில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பை பொறுத்து அமையும்.

பொதுவாக பக்கவாதம் எந்தவொரு எச்சரிக்கையுமின்றி திடீரென்று வருவதால் அடிப்படை அறிகுறிகளை கண்டறிவது சவாலானதாக இருக்கும்.

அமெரிக்காவின் தேசிய பக்கவாத சங்கம்,

‘பாஸ்ட்’ எனும் நான்கு ஆங்கில எழுத்தின் சுருக்கத்தை கொண்டு பக்கவாத அறிகுறிகளை விவரிக்கிறது. முதல் எழுத்தான ‘எப்’ என்பது முகத்தை (பேஸ்) குறிக்கிறது.

முகத்தின் ஒரு பகுதி சோர்வாகவோ, உணர்ச்சியற்றோ, ஒருபக்க மாக சரிவது போல இருந்தாலோ அது பக்கவாத பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம்.

அப்படி தென்பட்டால் சம்பந்தப்பட்டவரை நன்றாக சிரிக்க சொல்ல வேண்டும். அவர் புன்னகைப்பதற்கு சிரமப்பட்டாலோ, முகம் தளர்ந்து போய் இருந்தாலோ கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமானது.

இரண்டாவது எழுத்தான ‘ஏ’, கையை (ஆர்ம்ஸ்) குறிக்கும். அதாவது கை உணர்வற்று இருந்தாலோ அல்லது பலவீனமாக இருந்தாலோ அது பக்கவாதத்திற்கான ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.

இரு கைகளையும் நன்றாக தூக்க சொல்ல வேண்டும். சரியாக தூக்க முடியாவிட்டாலோ, சட்டென்று கையை கீழே தொங்கவிட்டாலோ மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

மூன்றாவது எழுத்தான ‘எஸ்’ பேசும் விதத்தை குறிப்பிடும். பேசும்போது வார்த்தைகள் தடுமாறினாலோ, வாய் குழறினாலோ, பேச்சு தெளிவற்று இருந்தாலோ அதுவும் பக்கவாதத்தின் ஆரம்பக்கட்ட அறிகுறிகளாகும்.

Leave a Reply