நம்முடைய முகத்திலிருக்கும் பிரச்சினைகளுக்கு படிப்படியாக தீர்வை கொடுக்க நாம் பயன்படுத்தப் போகும் அந்த ஒரு பொருள், ‘அஸ்வகந்தா பொடி’. இது நாட்டு மருந்து கடைகளில் நமக்கு கிடைக்கும்.
நாட்டுமருந்து கடைகளில் சென்று வாங்க முடியாதவர்கள் ஆன்லைனில் இதை வாங்கிக் கொள்ளலாம்.
இது ஒரு மூலிகைப் பொருள். இந்த அஸ்வகந்தா பொடியை உங்களுடைய முகத்திற்கு தேவையான அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.
எடுத்துக்காட்டிற்கு 2 ஸ்பூன் அஸ்வகந்தா பொடி எடுத்துக்கொண்டால், அதில் 1 டேபிள் ஸ்பூன் அளவு தயிரை ஊற்றி நன்றாக கலந்து பேஸ்டாக தயார் செய்து கொள்ள வேண்டும்.
இந்த பேஸ்டை முகத்தில் பேக் போட வேண்டும். முதலின் முகம் முழுவதும் இந்த பேஸ்டை அப்ளை செய்து கொள்ளுங்கள்.
அடுத்து எந்த இடத்தில் அதிகமாக உங்களுக்கு பிரச்சனை இருக்கிறதோ, வாயை சுற்றி கருவளையம் இருந்தால் கன்னத்தில் முகப்பரு தழும்புகள் இருந்தால், கண்ணுக்குக் கீழே கருவளையம் அதிகமாக இருந்தால், அந்த இடத்தில் கொஞ்சம் அடர்த்தியாக போட்டுக்கொள்ளலாம்.
பின்னர் 20 நிமிடங்கள் இந்த ஃபேஸ் பேக் அப்படியே இருக்கட்டும்.
அதன் பின்பு குளிர்ந்த தண்ணீரில் உங்களுடைய முகத்தை லேசாக மசாஜ் செய்து கழுவி விடுங்கள்.