சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல் மயக்கம் நீங்கி விடும்.
திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வந்தால் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.
மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாய்வு தொல்லை நீங்கும்.
ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கசாயம் செய்து சாப்பிட்டால் அதிக பேதி போக்கு நிற்கும்.