நெற் பயிர்ச்செகை செய்யும் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்.

0

நெற் பயிர்ச்செகை செய்யும் விவசாயிகளுக்கு பெரும் போகத்திற்கான சேதன உர வழங்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்கமைய குறித்த தீர்மானம் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

அம்பாறை, அனுராதபுரம், பொலன்னறுவை, மொனராகலை, திருகோணமலை, மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை, குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கே இந்த சேதன உர விநியோகத்தில் முன்னுரிமை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply