வெந்தயத்துடன் சிறிதளவு பால் சேர்த்து பேஸ்ட்டாக செய்து கொள்ளுங்கள்.
அதனை முகத்தில் தடவி லேசாக மசாஜ் செய்திடுங்கள்.
பின்னர் 15 நிமிடங்கள் கழித்து கழுவிடலாம்.
இவ்வாறு செய்வதால் சரும துளைகளில் உள்ள அடைப்புகள் நீங்கி சருமம் சுத்தமாக இருக்கும்.
அத்துடன் தினமும் அதிகப்படியான தண்ணீர் குடித்து வரவேண்டும்.
இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி சருமம் பொலிவாக நிலையில் காட்சி அளிக்கும்.