ஜீ தமிழ் செம்பருத்தி சீரியல் சில வருடங்களாக முன்னிலையில் ஓடிவருகிறது .
இந்த சீரியலின் முக்கிய ஜோடியாக முதலில் கார்த்திக் மற்றும் ஷபானா ஆகிய இருவரும் நடித்து வந்தார்கள்.
பின்னர் கார்த்திக் சீரியலில் இருந்து வெளியேறியுள்ளார்.
அதன் பின்னர் அவருக்கு பதிலாக ஒரு புதுமுக நடிகர் நடித்து வருகிறார்.
முன்பு இருந்ததைப் போல சீரியலுக்kகு TRP கிடைக்கவில்லை என்றுதான் கூறவேண்டும்.
இந்த நிலையில்தான் ஷபானா சீரியல் நடிகர் ஆர்யன் என்பவரை காதலிக்கும் விடையும் வைரலாகி வந்தது.
அந்த ஆர்யன் வேறுயாரும் இல்லை விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் செழியன் தான்.
அந்த வகையில் ஆர்யன் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரே மாதிரியான மோதிரம் அணிந்து தனது காதலியுடன் எடுத்த புகைப்படத்தில் ஷேர் செய்துள்ளார்.
இந்நிலையில் குறித்த இருவருக்கும் நிச்சயதார்த்தம் ரகசியமான முறையில் முடிந்து விட்டதோ என பலராலும் பேசப்படுகிறது.