என்ன செய்தாலும் மீண்டும் மீண்டும் வந்து தொல்லை செய்யும் இந்த தலைவலியை குணப்படுத்த நாம் என்ன செய்ய வேண்டு?

0

தலைவலி என்ற நோய் கூடுதலானவர்களுக்கு அடிக்கடி ஏற்படும்.

இந்த தலைவலி வந்துவிட்டால் எந்த வேலையும் சரியாக செய்ய முடியாது.

மற்றும் உடல்நிலையையும் மிக சோர்வாக உணர வைக்கும்.

பெண்கள் தலை வலி ஏற்பட்டால் உடனே வலி நிவாரண மாத்திரைகளை உட்கொள்பவர்கள்.

அவ்வாறு ஆண்கள் புகை பிடித்து விட்டு ஒரு டீ குடித்துவிட்டு மீண்டும் வேலையை செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.

என்ன செய்தாலும் மீண்டும் மீண்டும் வந்து தொல்லை செய்யும் குணாதிசயம் கொண்டதுதான் இந்த தலைவலி.

இப்படிப்பட்ட தலைவலியில் இருந்து விடுபடுவதற்கான மருத்துவ குறிப்புகளை பார்ப்போம்:

அக்குபஞ்சர்: பல வருடங்களாக தலைவலியில் இருந்து எளிதில் விடுபடுவதற்கு அக்குபஞ்சர் முறையை மக்கள் பின்பற்றி வருகின்றனர்.

தண்ணீர்: நீரை கொஞ்சம், கொஞ்சமாக சிப் செய்து பருகினால் உங்கள் தலை வலி மெல்ல குறையும்.

உங்கள் உடலில் நீரின் அளவு அதிகரிக்கும்போது தலை வலி படிப்படியாக குறையும்.

கிராம்பு: சூடு செய்த கிராம்பை கைக்குட்டையில் மடித்து, அதை மூச்சினால் உள்ளிழுத்தால் ஒரு நிமிடத்தில் தலைவலி குறைந்துவிடும்.

உப்பும், ஆப்பிளும் : அடுத்த முறை உங்களுக்கு தலைவலி ஏற்பட்டால் இந்த விலகிய பியூட்டி நிவாரண முறையை பின்பற்றி பாருங்கள், ஆப்பிளை வெறும் என மென்று சாப்பிடாமல் அறுத்த ஆப்பிளில் அதன் மேல் உப்பு கொஞ்சமாக தூவி சாப்பிட்டால் தலைவலி குறையும்.

மகிழ்ச்சியான மனநிலை : சிலருக்கு இது வியப்பாக இருக்கும். ஆனால் நீங்கள் கண்டதை நினைத்து மனதை குழப்பாமல் மகிழ்ச்சியாக இருந்தாலே உங்களது தலைவலி ஒரு நிமிடத்தில் குறைந்துவிடும்.

Leave a Reply