மட்டக்களப்பு கோரளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் வாகனேரி குடா முனைகள் கிராமத்தில் வீசிய மினி சூறாவளியால்30 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு சேதமடைந்த வற்றில் இரண்டு வீடுகள் முழுமையாகவும் 28 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நேற்றைய தினம் மாலை குறித்த பிரதேசத்தில் திடீரென வீசிய சூறாவளி மற்றும் மழை காரணத்தினால் அனர்த்த நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சூறாவளியால் வீட்டுக் கூரைகளில் தூக்கி வீசப்பட்டது டன் வீட்டில் உள்ள பொருட் களும் சேதமடைந்துள்ளன.
இருப்பினும் இதன் போது எவருக்கும் எந்த விதமான உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.