பொடுகை முற்றாக ஒழிக்கும் மருதாணி இலை!

0

மருதாணி இலை நரைத்த முடியை கறுப்பாக செய்வதற்கும் இதனை ஒரு அழகு சாதனமாகவும் பயன்படுத்துகின்றனர்.

இந்த மருதாணி குளிர்ச்சி ஏற்படுத்தும் தன்மை கொண்டது.

மருதாணி இலைகளை வீங்கிய பகுதியில் தடவி , அதைக் காய விட்டால் வீக்கம் மெதுவாக குறைய ஆரம்பிக்கும்.

இரவு தூங்கும் போது இந்த மருதாணி பேஸ்ட்டை பாதத்தில் தடவினால் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும்.

சரும நோய்கள் தீர்க்கும் மருதாணி

அத்துடன் இந்த மருதாணி பேஸ்ட்டை தலை முடியில் தடவினால் தலையில் உள்ள பொடுகு குறைந்து தலை முடியை மென்மையாக்கி, பளபளப்பை உண்டாக்கும்.

மேலும் நரை முடியை மறைப்பதற்காகவும் இதைப் பயன்படுத்தலாம்.

மருதாணி இட்டுக் கொள்வதால் நகங்களுக்கு எந்த நோயும் வராமல் பாதுகாக்கலாம்.

இந்த மருதாணி இட்டுக் கொண்டால் சிலர் சளி பிடித்து விடும் என்பவர்கள் இதனுடன் ஏழு அல்லது எட்டு நொச்சி இலைகளை சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளலாம்.

சரும நோய்கள் தீர்க்கும் மருதாணி

கால் கை இடுக்கிலும் கழுத்து பகுதியிலும் இடுப்பிலும் வரக்கூடிய கரும்படை, வண்ணான்படை போன்ற படைகளை இந்த மருதாணி கொண்டு குணப்படுத்த முடியும்.

மேலும் ஆறாத வாய்ப்புண், அம்மைப் புண் ஆகியவற்றிற்கு இதன் இலையை அரைத்து நீரில் கரைத்து வடித்து வாய் கொப்பளிக்கலாம்.

மருதாணி இலையை அரைத்து அம்மைப் புண்களுக்குப் பூசலாம் 3-5 நாட்களில் இந்த அம்மை நோய் குணமாகும்.

மருதாணி இலை கிருமி நாசினி, கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது.

நகசுத்தி வராமல் தடுக்கும் என்பதுடன் புண்ணை ஆற்றவும் இது நல்ல மருந்தாக காணப்படுகின்றது.

சரும வறட்சியை போக்கும் மருதாணி.. - The Subeditor Tamil

Leave a Reply