நீங்கள் பாத வெடிபால் சிரமப்படுகிறவர்களா – இதோ அதற்கு நல்ல நிவாரணம்!

0

பாத வெடிபால் பலர் அன்றாடம் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்த பாத வெடிப்பிற்கான காரணம் பலருக்குத் தெரியாமல் இருக்கின்றது.

சாதாரண பாத வெடிப்பு தானே என்று விட்டு விட கூடாது.

குறிப்பாக பாதவெடிப்பானது பாதங்களை சுத்தமாக பராமரிக்காமல் விடுவதால் உண்டாகும்.

இதனால் வெடிப்புகள் ஏற்பட்டு அந்த பாத வெடிப்பு புண்களாக மாறி நடக்கும் போது மிகவும் அதிக வலியை தரும்.

இந்தப் பாத வெடிப்பு மூலம் கிருமித்தொற்று உண்டாகும் வாய்ப்பு உள்ளது.

பாத வெடிப்பு உடலில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உண்டாகிறது.

ஆகவே இந்த பாத வெடிப்பு குணமாக வீட்டில் இருக்கும் இரண்டு பொருட்கள் போதும்.

நமது பாதங்களின் அழகைக் கொடுக்கும் இந்த பாதவெடிப்பை சீக்கிரமாக போக வீட்டிலேயே செய்யக்கூடிய ஒரு இயற்கை கிரீம்.

பாத வெடிப்பு குணமாக கிரீம் – தேவையான பொருட்கள்:
1 வெற்றிலைக்கு பயன்படுத்தும் சுண்ணாம்பு- ஒரு ஸ்பூன்
2 தேங்காய் எண்ணெய் – 2 ஸ்பூன்

பாத வெடிப்பு குணமாக கிரீம் – செய்முறை:
ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் சுண்ணாம்பு மற்றும் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் எடுத்துக் கொள்ளுங்கள்.

பின்பு அவற்றை நன்றாக கலந்து கொள்ளுங்கள், அவ்வளவுதான் கிரீம் தயார்.

தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக நெய் கூட பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த க்ரீம் பயன்படுத்தும் முறை பற்றி பார்ப்போம்.

பாத வெடிப்பு குணமாக தினமும் இரவு தூங்கும் முன் கால்களை சிறிது நேரம் வெண்ணீரில் ஊறவைத்து, பழைய பற் தூரிகையை பயன்படுத்தி கால்களில் இருக்கும் அழுக்குகளை நீக்கி விட்டு, பின்பு இந்த கிரீமை பாத வெடிப்பு உள்ள இடத்தில் தடவி இரவு முழுவதும் வைத்திருந்து பின்பு மறுநாள் காலை எழுந்ததும் கால்களை கழுவி விட வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து இந்த முறையை இரண்டு வாரங்கள் செய்து வர கால்களிலுள்ள பாத வெடிப்புகள் மறைந்துவிடும். பாத வெடிப்பு குணமாக இதைவிட சிறந்த வைத்தியம் எதுவும் இல்லை.

Leave a Reply