மன்னாரில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நாளை தடுப்பூசி!

0

நாளைய தினம் முதல் மன்னார் மாவட்டத்திற்காக வழங்கப்பட்டுள்ள மேலும் 222,30 மைசர் தடுப்பூசிகளை 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி. வினோதன் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தெரிவித்திருந்தார்.

அத்துடன் மன்னார் மாவட்டதை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்டவர் களுக்கு இந்த தடுப்பூசியை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மன்னார் மாவட்டத்தில் இதுவரையில் 19,500 பேருக்கு பைச தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக வைத்தியர் ரி. வினோதன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply