இந்த பானம் குடித்தால் இந்த நோய் தீருமா?

0

பானம் தயாரிக்கும் முறை:

தேவையான பொருட்கள்:
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
துளசி இலை – 1 கைப்பிடி அளவு
தண்ணீர் – 1 லிட்டர்

செய்முறை:
பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும், அதன் பிறகு அவற்றில் மஞ்சள் தூள் மற்றும் துளசி ஆகியவற்றை போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி வைக்கவும், அவ்வளவுதான் பானம் ரெடி.

சிலருக்கு அடிக்கடி சளி பிரச்சனை வரும். அதற்கு இந்த பானத்தை ஒரு டம்ளர் குடித்து வந்தால் சளி பிரச்சனை குணமாகும். மேலும் நுரையீரலில் உள்ள சளி தேக்கத்தை குறைத்து, சளி பிடிப்பதை தடுக்கும்.

ஆஸ்துமா நோய் குணமாக தினமும் துளசி நீரில் மஞ்சள் கலந்த பானத்தை குடித்து வந்தால் ஆஸ்துமா நோயில் இருந்து விடுபட்டு, நிம்மதியாக சுவாசிக்கலாம்.

இந்த இயற்கை பானத்தை குடித்து வந்தால் சிறுநீரகத்தில் உள்ள டாக்ஸின்களை வெளியற்றி சிறுநீரகத்தை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளும்.

Leave a Reply