நாடு பூராகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைய கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 403 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இவற்றுள் அதிகளவான கைது நடவடிக்கை கண்டி மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
முகக் கவசம் அணியாமை மற்றும் மாகாண எல்லைகளை கடந்தமை போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலே குறித்த நபர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமையகடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 45,935 ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.