இந்தியாவில் தற்போது கடந்த சில தினங்களாக கொவிட் தொற்றின் வீரியம் சற்று குறைந்து வருகிறது.
இதற்கமைய கொவிட் தொற்றின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகள் காரணத்தினால் குறித்த நோய் தொற்றிலிருந்து குணமடைந்து செல்பவர்களின் விகிதம் அதிகரித்து காணப்பட்டது.
அத்துடன் தொற்றின் பாதிப்பை கண்டறியும் வகையில் பரிசோதனைகளும் அதிக அளவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த ஜனவரி 16ஆம் திகதி முதல் பல கட்டங்களாக கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி இலவசம் என்ற திருத்தப்பட்ட புதிய தடுப்பூசி கொள்கை ஜூன் 21ஆம் திகதி முதல் அமுலில் உள்ளது.
இதற்கமைய கடந்த 24 மணி நேரத்தில் 27,60,345 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதுயடுத்து மொத்தமாக 33,57,16,019 தடுப்பூசிகள் இதுவரையில் செலுத்தப்பட்டுள்ளன.
அவற்றுள் 5,96,16,139 பேர் பேர் இரண்டு தவளை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டுள்ளனர்.
மேலும் 18 முதல் 44 வயதுடையவர்களுக்கு 9,37,82,625 தடுப்பூசிகளும், 45 முதல் 59 வயதிற்கு மேற்பட்டோருக்கு 10,49,61,999 தடுப்பூசிகளும், 60 வயதுதிற்கு மேற்பட்டவர்களுக்கு 9,24,73,680 தடுப்பூசிகளும் முன்களம் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு 4,44,97,688 கோடி தடுப்பூசிகளும் இவ்வாறு போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்தியாவில் கொவிட் பாதிப்பை கண்டறிவதற்கு நேற்று ஒரே நாளில் மாத்திரம் 19,21,450 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.