யாழில் இடம்பெற்ற வன்முறை தாக்குதலில் ஒருவரின் கை துண்டாக்கப்பட்டுள்ளது.

0

யாழ் – கோப்பாய் பகுதியில் காவற்துறை பிரிவுக்குற்பட்ட கோண்டாவில் இலங்கை பேருந்து சாலைக்கு பின்புறமாக உள்ள பகுதியில் இடம்பெற்ற வன்முறையில் 7 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர்களில் ஒருவரது கை துண்டாக்கப்பட்டுள்ளது என காவற்துறையினர் தெரிவித்தனர்.

இதற்கிமைய குறித்த சம்பவத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீபத்துக் காரணமாக அதனைக் கட்டுப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் இந்தச் சம்பவம் நேற்றைய தினம் இரவு இடம்பெற்றுள்ளது

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட வன்முறைக் கும்பல் இந்த அட்டூழியத்தில் ஈடுபட்டது.

இந்த தாக்குதல் மூலம் வாகனங்கள் உற்பட பெறுமதியான சில பொருட்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் ஒருவரின் கை துண்டாக்கப்பட்டுள்ளதுடன் 7 பேர் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply