உங்களுக்கு அதிர்ஷ்டம் கொட்ட வேண்டுமா ? வெள்ளிக்கிழமையில் இதனை கடைபிடியுங்கள்

0

வெள்ளிக்கிழமை ஆன்மீக வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாள். பூஜை செய்ய உத்தமமான நாள். வெள்ளிக்கிழமையில் ஒருசில செயல்களை செய்தால் அதிர்ஷ்டம் வந்து சேரும். அது என்னவென்று பார்ப்போம்.

1. வெள்ளிக்கிழமை அன்று விரதம் இருப்பது மிகவும் உத்தமமான ஒன்று.
விரதம் இருப்பின் லட்சுமி, முருகன், சுக்கிரன் ஆகிய மூவரின் அருளும் ஒருங்கே கிடைக்கும்.

2. குபேர விளக்கில் தாமரை திரி இட்டு சுத்தமான பசுநெய் கொண்டு விளக்கேற்ற வேண்டும்.

3. மாலை வேளையில் சுத்தமான சாம்பிராணி கொண்டு வீடு முழுக்க புகை போடுங்கள். வீட்டிலுள்ள துர் சக்தி வெளியேறி நல்ல சக்தியான லட்சுமி குடியேறுவாள்.

4. வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் கல்லுப்பு வாங்கவும்.

5. சுக்ர ஓரையில் தாமரை இதழ் கொண்டு மகாலட்சுமி அஷ்டோத்திரம் கனகதாரா ஸ்தோத்திரம் கூறி வழிபடுங்கள்.

6. அகலில் நெய் ஊற்றி மஞ்சள் கலந்த திரி இட்டு வீட்டு வாசலில் இருபுறமும் விளக்கேற்ற வேண்டும்.இது லட்சுமி தீபமாகும்.

7. லட்சுமிக்கு மிகவும் பிடித்தமான பழம் மாதுளை.ஆகவே மாதுளையை நன்றாகக் கழுவி மாதுளை மணித்துளிகளை லட்சுமி திருவுருவப் படத்தின் கால் அடியிலோ அல்லது விக்ரகத்தின் காலடியில் சேர்க்க வேண்டும்.

8. விளக்கு வைத்தபின் வீட்டிலிருந்து எந்தப் பொருளையும் தானம் கொடுப்பதை தவிர்க்கவும்.

9. வெள்ளிக்கிழமையில் ஏழை எளியவருக்கு அன்னதானம் கொடுக்க நம் பாவங்கள் வெகு விரைவில்
கரைந்து அதிஷ்டம் நம் இல்லம் தேடி வரும்.

10. வெள்ளிக்கிழமையில் கட்டாயமாக
நெய் ஊற்றி பஞ்சமுக திரியிட்டு குத்துவிளக்கு ஏற்றி குத்து விளக்கு பூஜை செய்ய வேண்டும்.- Source: dinakaran


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply