நீதி அமைச்சர் விடுத்த வேண்டுகோள்!

0

“வடக்கு, கிழக்கில் தமிழ்க் கட்சிகளுக்கிடையில் பிளவுகள் இருப்பது போல் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுக்கிடையிலும் பிளவுகள் இருக்கின்றன.

இலங்கை அரசால் தடை நீக்கம் செய்யப்பட்ட புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றுபட்டு இலங்கை மீண்டெழ தம்மாலான அனைத்து உதவிகளையும் வழங்க முன்வர வேண்டும்.” என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“உள்நாட்டுப் போர் காரணமாக வடக்கு, கிழக்கிலிருந்து பெருமளவிலான தமிழ் மக்கள் பல நாடுகளுக்குப் புலம்பெயர்ந்துள்ளனர். அவர்களில் செல்வந்தர்கள் தத்தமது நாடுகளில் தனிநபர்களாவும், அமைப்புக்கள் ரீதியாகவும் செயற்பட்டு வருகின்றார்கள்.

இலங்கை விவகாரத்தில் அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும். எமது நாடு மீண்டெழ தம்மாலான அனைத்து உதவிகளையும் வழங்க அவர்கள் முன்வர வேண்டும். அவர்களில் சிலர் தற்போது தாமாகவே இலங்கைக்கு உதவ முன்வந்துள்ளார்கள்.

Leave a Reply