காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு 21-ந்தேதி ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை.

0

வங்கக்கடலில் நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

அந்தமான் அருகே தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவாகி இருக்கும் இந்த குறைந்த காற்றழுத்தம் இன்று மேலும் வலுப்பெற தொடங்கி உள்ளது.

தற்போது இந்த குறைந்த காற்றழுத்தம் மேற்கு, வடமேற்கு திசை நோக்கி நகர தொடங்கி உள்ளது.

நாளை (சனிக்கிழமை) அது காற்றழுத்த மண்டலமாக மாறும் போது மேலும் வலுவடையும்.

காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை நிலவரப்படி தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் ஆந்திராவின் தென் மாவட்டங்களை நோக்கி நகர தொடங்கி இருக்கிறது.

இது ஆந்திரா, தமிழகம் கடலோரத்தை நாளை மறுநாள் நெருங்க கூடும்.

Leave a Reply