ஒரு முட்டையின் வெள்ளை கருவுடன், இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்துகொள்ளுங்கள்.
இந்த கலவையை உங்கள் தலைமுடியில் நன்றாக அப்ளை செய்ய வேண்டும்.
பின் 1/2 மணி நேரம் கழித்து மையிலேடு ஷாம்பு பயன்படுத்தி தலை குளிக்க வேண்டும்.
இவ்வாறு வாரத்தில் ஒரு முறை இந்த டிப்ஸை செய்து வந்தால் தலைமுடிக்கு நீங்கள் எந்த ஒரு பராமரிப்பு முறையும் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. முடி மிகவும் சாப்டாக, பளபளப்பாக இருக்கும்.
அவ்வாறு முட்டையின் வெள்ளை கருவுடன், சிறிதளவு ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்துகொள்ளுங்கள்.
இந்த கலவையை தலைமுடியின் வேர் பகுதியில் நன்றாக அப்ளை செய்ய வேண்டும்.
பின் 20 நிமிடம் கழித்து தலை முடிக்கு மையிலேடு ஷாம்பு பயன்படுத்தி நன்றாக தலை அலச வேண்டும். இவ்வாறு செய்வதினால் தலை முடி வறண்டு போவது தடுக்கப்படுகிறது,
மேலும் பொடுகு பிரச்சனை இருந்தாலும் அதனை சரி செய்கிறது. ஆகவே இந்த டிப்ஸை வாரத்தில் ஒருமுறை செய்து வருவதன் மூலம் முடி வளர்ச்சி அதிகரிக்கப்படும். அதேபோல் அடர்த்தியாகவும் காணப்படும்.