முருங்கை பொடியில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்டு செல்களில் ஏற்படும் சேதம், மன அழுத்தம், உடலில் ஏற்படும் வீக்கங்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது. மேலும் உடலில் உள்ள உயிர் அணுக்கள் சேதமாவதை தடுக்கும்.
- தினமும் முருங்கை கீரை பொடி சாப்பிடுவதினால் நீரிழிவு நோய், ஆர்திரிடிஸ், இதய நோய், உடல் பருமன் போன்ற பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கும்.
- சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் முருங்கை பொடி சாப்பிடுவதினால் உடலில் உள்ள சர்க்கரை அளவு மற்றும் கொழுப்பை குறைத்து நம்மை சர்க்கரை நோயில் இருந்து பாதுக்காக்கும்.
- நம் மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்க தினமும் சாப்பிடும் உணவுகளில் முருங்கை பொடியை பயன்படுத்தலாம்.
- நம் கல்லீரலில் ஏற்படும் நோய்களை குணப்படுத்த முருங்கை கீரை அல்லது முருங்கை பூவில் செய்த பொடியினை தினமும் சாப்பிடலாம். இவ்வாறு தினமும் சாப்பிடுவதினால் கல்லீரலில் ஏற்படும் விஷத்தன்மை மற்றும் நச்சுத்தன்மையை குணப்படுத்தும்.