ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதை தொடர்ந்து அரசியல் அரங்கில் பல்வேறு மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன.
இதேவேளை எதிர்காலத்தில் அமைக்கப்படவுள்ள அனைத்துக் கட்சி உள்ளடங்கிய அரசாங்கத்தில் இணையுமாறு எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அக்கட்சியைச் சேர்ந்த 8 எம்.பி.க்கள் அமைச்சர்களாகப் பதவியேற்க அரசு முன்மொழிந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் ஏனைய ஆளும் தரப்பு மற்றும் எதிர்த்தரப்பில் உள்ள கட்சிகள்,குழுக்களுக்கு அமைச்சு பதவி வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.