மூன்று உயர் பதவிகளுக்கு புதிய நியமனம்.

0

புதிதாக மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய இலங்கை சுங்கத்தின் பணிப்பாளர் நாயகமாக பீ.பி.எஸ்.சி. நோனிஸ்நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை சுங்கத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள அவர், முன்னதாக பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளராக செயற்பட்டு வந்துள்ளார்.

இதேவேளை, உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகமாக டீ.ஆர்.எஸ். ஹப்புஆராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

திறைசேரியின் பிரதி செயலாளராக டபிள்யூ.ஏ.சத்குமார நியமிக்கப்பட்டுள்ளார் என அமைச்சரவை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply