சரியான தூக்கம் இல்லையென்றாலும், கண் தொடர்ந்து அதிகமாக துடித்து கொண்டே இருக்கும்.
எனவே ஒருவருக்கு இரவு தூக்கமானது ஏழு முதல் எட்டு மணி நேரம், நல்ல ஆழ்ந்து உறங்குங்கள்.
குறிப்பாக படுக்கைக்குச் செல்லும் முன்னர் தொலைக்காட்சி மற்றும் மொபைல் போன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
அவ்வாறு தேநீர் மற்றும் காஃபி போன்ற காஃபைன் சேர்ந்த பானங்களை குடிப்பது, காஃபைன் கலந்த சாக்லேட் சாப்பிடுவதை குறைத்துக்கொள்ளலாம் அல்லது முற்றிலும் நிறுத்தி விடலாம்.
ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் காஃபைனை நிறுத்திவிட்டு கண்ணிமை துடிக்கிறதா என்று கண்காணிக்கலாம்.



