எதிர்வரும் பண்டிகை காலப்பகுதியில் பல்வேறு தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக பெருந்திரளானோர்கள் கொழும்பு நகருக்கு வருகை தருகின்றனர்.
இந்நிலையில் காலிமுகத்திடல்,கோட்டை புறக்கோட்டை ஆகிய பகுதிகளில் அதிகளவிலான வாகன நெரிசல் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.
இதன் பிரகாரம் குறித்த பகுதிகளில் இன்றைய தினம் அதிக அளவிலான வாகன நெரிசல் ஏற்பட கூடும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.