அத்தியாவசிய மருந்துகள் தனியார் துறையினரிடம் கைவசம் உள்ளது.

0

தற்போது நாட்டில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இந்நிலையில் அத்தியாவசியமான மருந்துகள் தட்டுப்பாடு இன்றி தனியார் துறை வசம் உள்ளதாக தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்படும் நோயாளர்களுக்கான தையல் இழைகள் மற்றும் இருதய நோயாளிகளுக்கான ஸ்டென்ட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மேலும் மருந்து பற்றாக்குறையை குறித்து கருத்து தெரிவித்த மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் சமன் ரத்னாயக்க, நாணய கடிதங்கள் திறக்கப்பட்டு பல உயிர் காக்கும் மருந்துகள் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் தற்போதைய நிலைமையில் மிகவும் அத்தியாவசியமான சத்திரசிகிச்சைகள் மாத்திரமே மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply