இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

0

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இந்நிலையில் இலங்கைக்கு கிழக்காக உருவாகியுள்ள கீழ் வளிமண்டல தளம்பல் நிலை காரணத்தால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த சில மூன்று நாட்களில் மழையின் நிலைமை அதிகரிக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

அவ்வாறு மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும், களுத்துறை மாவட்டத்திலும் சிலவிடங்களில் 100 மில்லிமீட்டர் மழை எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆகவே பொதுமக்கள் அனைவரும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Leave a Reply