சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஆளும் கட்சியின் பங்காளிக் கட்சிகள் ஆகியவற்றின் சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களே குறித்த சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளனர்.
அத்துடன் குறித்த கலந்துரையாடலின் போது பல தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளனர்.
மேலும் ஆளும் கட்சி பங்காளிக் கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றில் இன்று கூடியதன் பின்னர் ஏனைய இரண்டு கட்சிகளையும் சந்திக்கவுள்ளனர்.
மேலும் இதுவரையில் மூன்று தரப்பினர் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



