நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
அத்துடன் மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சிலவிடங்களில் 100 மில்லி மீட்டருக்கு மேல் பல்த்த மழை பெய்யும்.
மேலும் சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணத்தால் ஏப்ரல் 5 ஆம் திகதியிலிருந்து 15 ஆம் திகதி வரை இலங்கையில் அகலாங்குகளுக்கு நேராக உச்சங் கொடுக்கவுள்ளது.



