பொதுவாக தலையில் அதிகமாக நீர் கோர்த்து கொண்டால் இரவு உறங்குவதற்கு முன் அடுப்பில் ஒரு பெரிய பாத்திரத்தை வைத்து அவற்றில் பாதியளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வையுங்கள்.
தண்ணீர் நன்றாக கொதித்ததும் அடுப்பில் இருந்து பத்திரமாக இறக்கி அவற்றில் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் 2 கைப்பிடியளவு நொச்சி இலை சேர்க்க வேண்டும்.
பின் இந்த நீரில் இருந்து வரும் ஆவியினை முகத்தில் ஆவி பிடிக்க வேண்டும்.
ஆவி பிடிக்கும் போது 2-3 போர்வையினை போர்த்திக்கொண்டு முகத்தில் ஆவி பிடியுங்கள்.
இவ்வாறு முகத்தில் ஆவி பிடிப்பதினால் தலையில் உள்ள நீர் அனைத்தும் வெளியேறிவிடும்.
மஞ்சள் ஒரு கிருமிநாசினி பொருளாகவும் நொச்சி இலை தலைவலி, சளி, இருமல், தும்மல் போன்ற பிரச்சனைகளை சரி செய்வதற்கும் பயன்படுகிறது.



