வெங்காயத்தை பச்சையாக கடித்து சாப்பிட்டால் வாய் புண் மற்றும் கண்வலி குணமாகும்.
காரணம் வெங்காயத்தில் அதிகளவு உள்ள ரிபோபிளவின் என்னும் பி குருப் வைட்டமின் ஆகும்.
சிறிய வெங்காயமோ அல்லது பெரிய வெங்காயமோ இரண்டும் ஒரே மாதிரியான மருத்துவ குணத்தை அளிக்கும் தன்மை வாய்ந்தது.
வெங்காயத்தை வதக்கியோ அல்லது வேகவைத்தோ எப்படி வேண்டும் என்றாலும் சாப்பிடலாம்.
இவ்வாறு சாப்பிடுவதால் வெங்காயத்தில் உள்ள நறுமணம், சுவை மற்றம் மருத்துவ குணம் முழுமையாக கிடைக்கிறது.
சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் தினமும் பச்சை வெங்காயம் சாப்பிட்டால் சிறுநீரக பிரச்சனை குணமாகும்.
இரத்தம் விருத்தியாக தினமும் பச்சை வெங்காயம் சாப்பிட வேண்டும்.
செரிமானம் அடைய தினமும் வெங்காயத்தை பச்சையாகவோ, சமைத்தோ அல்லது மற்ற உணவுகளுடன் கலந்தோ சாப்பிட்டால் செரிமானம் பிரச்சனைகள் குணமாகும்.



