நாட்டில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவருகின்றது.
இந்நிலையில் தனியார் பஸ்களுக்கு இலங்கை போக்குவரத்து டிப்போக்களில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் மூலம் எரிபொருளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் தெரிவு செய்யப்பட்ட 45 டிப்போக்கள் இதற்காகச் செயற்படுகின்றன.
மேலும் எதிர்வரும் தினங்களில் மேலும் சில டிப்போக்கள் இந்த முறையின் கீழ் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமென்று இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.



