தமிழகத்தில் மதுபான வகைகளின் விலை உயர்த்தப்பட்டது.

0

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை தமிழ்நாடு வாணிப கழகம் நடத்தி வருகிறது.

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுக்கு முன் தமிழகத்தில் மதுபான வகைகளின் விலை உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், அனைத்து மதுபானங்களின் விலையும் உயர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

அதன்படி, குவார்ட்டர் தற்போது விற்கும் விலையுடன் கூடுதலாக ரூ.10 உயர்ந்துள்ளது. பீர் பாட்டிலின் விலையும் அதிகரித்துள்ளது.

மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டதன் மூலம் அரசுக்கு ஆண்டிற்கு வருவாயாக கூடுதலாக சுமார் ரூ.2000 கோடி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் டாஸ்மாக் மதுபான விலை உயர்வால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply