இன்று ஏழரை மணி நேர மின்வெட்டு.

0

தற்போது நாடு பூராகவும் மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இந்நிலையில் 26 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்றைய தினம் ஏழரை மணி நேரம் மின்சாரம் துண்டிப்பை நடைமுறைப்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் 5 மணி நேரம் மின்சாரம் துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதியில் இரண்டரை மணி நேரம் மின்தடை அமுலாக்கப்படவுள்ளது.

மேலும் மின்சார உற்பத்திக்குத் தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு அடுத்த வாரத்திற்குள் நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ளாவிட்டால் மத்திய வங்கிக்கும் திறை சேரிக்கும் எதிராக வழக்கு தொடரும் நிலை ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply