இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

0

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வடக்கு, வடமத்திய , கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் இன்று இரவு முதல் மார்ச் 4ஆம் திகதி வரை மலையுடன் வானிலை நிலவும்.

அத்துடன் கிழக்கு ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா, மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும்.

மேற்குறிப்பிடப்பட்ட பகுதிகளில் சிலவிடங்களில் 75 மில்லி மீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வடக்கு, வடமத்திய , கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மத்திய மலையகத்தின் கிழக்கு சரிவுகளிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீட்டர் வரை அதிகரிக்கும்.

Leave a Reply