காக்கை வாகனத்தின் மீது வந்து தானாக மோதுவதன் காரணம் என்ன?

0

ஆண் காக்கையை, பெண் காக்கை வெறுத்து விடுவதால் ஆண் காக்கை விரக்தியின் எல்லைக்குச் செல்லும்.

பெண் காக்கை அதன் பிறகு ஆண் காக்கையுடன் இணையாது.

இதனால் ஆண் காக்கைக்கு கடைசியில் தனிமை உண்டாகிறது.

இந்த தனிமையை ஏற்க முடியாமல் ஆண் காக்கை கொஞ்ச காலம் சுற்றித் திரிந்து ஏதாவது ஒரு மரக்கிளையில் அல்லது வாகனங்களில் தன்னைத் தானே மோதிக் கொண்டு காயப்படுத்தி இறந்துவிடும்.

அல்லது மின்சார கம்பிகளில் மோதி தற்கொலை செய்து கொள்ளும்.

இது தொடர்ச்சியாக நடைபெற்று வரும் ஒரு காகத்தின் வாழ்க்கையாகும்.

இதனால் நாம் சில சமயங்களில் வாகனம் ஓட்டும் பொழுது திடீரென நம் வாகனத்தின் மீது அவை மோதுவதை பார்க்க நேரிடுகிறது.

இதை அபசகுனமாக கருதாமல் இருப்பது மிகவும் நல்லது.

பறவை இனங்களில் காகத்திற்கு இந்து சமயத்தில் மிகப் பெரிய பங்கு உண்டு.

காகத்தை பித்ருக்களாக நினைத்து வழிபட்டு வரும் இந்துக்களுக்கு அதன் மீது ஒரு தனி பிரியம் உண்டு. காகம் அசைவத்தை சாப்பிட்டாலும், பித்ருக்களாக நினைத்து நாம் சாதம் வைக்கும் பொழுது அசைவத்தை பயன்படுத்தக் கூடாது.

பித்ரு வழிபாடு செய்யும் பொழுது காக்கைக்கு எச்சில் படாத உணவை மட்டுமே படைக்க வேண்டும்.

நாம் சாப்பிட்ட பிறகு அந்த சாப்பாட்டை காக்கைக்கு பித்ரு கடன் செலுத்தக் கூடாது.

சாப்பிடுவதற்கு முன்னர் காக்கைக்கு படைத்து பின்னர் சாப்பிடுவது தான் முறையானது. காக்கை கரைவது, காக்கை கொத்துவது போன்றவை சுப மற்றும் அசுப பலன்களை கொடுப்பதாகவும் ஜோதிடம் கூறுகிறது.

இப்படி காகத்தை வைத்து பல்வேறு விஷயங்கள் கூறினாலும், அதன் வாழ்க்கை என்னவோ இவ்விதமாக அமைந்துவிட்டது.

Leave a Reply