இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவருக்கும் – இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் கலந்துரையாடல்.

0

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர்ருக்கும், இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதற்கமைய குறித்த சந்திப்பு நேற்றைய தினம் இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கும் , உயர்ஸ்தானிகரால் இந்திய இல்லத்தில் வரவேற்பளிக்கப்பட்டது.

மேலும் கடந்த வெள்ளிக்கிழமை தமது நற் சான்றுகளை கையளித்தமைக்காக அமெரிக்கத் தூதுவரை பாராட்டிய உயர்ஸ்தானிகர், வெற்றிகரமான பதவிக்காலம் அமையப் பெற வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply