உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவியிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த வாக்குமூலம் ஆறு மணிநேரம் வரையான காலப்பகுதியில் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சஹ்ரான் ஹாசிம் என் மனைவி, வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள.
இதன் பிரகாரம் குளியாப்பிட்டி நீதவான் ஜனனி விஜயதுங்க அண்மையில் பிறப்பித்த உத்தரவின் பெயரில், நேற்றைய தினம் வெலிக்கடை சிறைச்சாலைக்கு பிரவேசித்த குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் சஹ்ரானின் மனைவிடம் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.