நிறைய காசு செலவு செய்ய கூடாது. ஆனால் நிறைய அழகு வேண்டும்..!!

0

அடுப்பில் ஒரு டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க வையுங்கள்.

அதில் 10 ஏலக்காய்களை நன்றாக நசுக்கி போட்டு கொதிக்க வைக்கவேண்டும்.

ஒரு டம்ளர் தண்ணீர், அரை டம்ளர் தண்ணீராக சுண்டி வரவேண்டும் ஏலக்காய் எசன்ஸ் அனைத்தும் அந்த தண்ணீரில் இறங்கி இருக்கும்.

இப்போது இந்த தண்ணீரை நன்றாக ஆற வைத்து வடிகட்டி கொள்ளுங்கள்.

அரை தம்ளர் அளவு அல்லது கால் டம்ளர் அளவு நமக்கு இந்த ஏலக்காய் எசன்ஸ் நிறைந்த தண்ணீர் கிடைத்தால் போதும்.

தண்ணீர் நன்றாக ஆரட்டும். அந்த தண்ணீரில் 2 ஸ்பூன் அளவு அலோ வேரா ஜெல் சேர்த்து அடித்து நன்றாக கலக்குங்கள்.

க்ரீமி பக்குவத்திற்கு உங்களுக்கு ஒரு ஜெல் கிடைத்திருக்கும்.

இந்த ஜெல்லை கண்ணாடி பாட்டிலில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து வைத்தால் 7 நாட்கள் வரை கெட்டுப் போகாது.

தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு இந்த கிரீமை உங்களுடைய விரல்களால் தொட்டு முகம் முழுவதும் ஆங்காங்கே சின்ன சின்ன புள்ளிகளாக வைத்து, அதன்பின்பு உங்களுடைய இரண்டு கைகளையும் முகத்தில் வைத்து வட்ட வடிவில் இரண்டு நிமிடம் போல நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.

அவ்வளவு தான், முகத்தில் கிரீம் போட்டதே தெரியாது. க்ரீம் அனைத்தும் உங்களுடைய முகம் உறிஞ்சி இருக்கும்.

அப்படியே தூங்கச் சென்றுவிடுங்கள்.

வழக்கம்போல மறுநாள் காலை எழுந்து முகம் கழுவிக் கொள்ளலாம்.

ரொம்ப ரொம்ப ஈஸியா தயார் செய்யக்கூடிய ஜெல் இது. நைட்ல மட்டும் தான் இதை முகத்திற்கு போட வேண்டுமா? நிச்சயம் கிடையாது.

நீங்க வீட்ல இருக்கீங்கன்னா, பகலிலும் இதை உங்களுடைய முகத்தில் போட்டுக்கலாம். முகத்தில் இருக்கும் கரும் புள்ளிகள் தழும்புகள் சுருக்கங்கள் மறைவதற்கு இந்த ஜெல் மிகமிக உபயோகமானதாக இருக்கும்.

Leave a Reply