உலகம் பூராகவும் ஒமிக்ரோன் பாதிப்பு மிக வேகமாக பரவி வருகின்றது.
இந்நிலையில் தமிழகத்தில் கொவிட் பாதிப்பு பல ஆயிரத்தை கடந்துள்ளது.
ஒரு பக்கம் கொவிட் தடுப்பு ஊசி செலுத்தும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
நேற்று மறுபக்கம் கொவிட் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.
இதன் பிரகாரம் சினிமாத் திரை துறையினர் பலர் கொவிட் தொற்று ஏற்பட்டு அதனை சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இசையமைப்பாளரும் நடிகரான விஜய் ஆண்டனி அவருடைய சமூக வலைத்தளத்தில் பாதி பெற்ற ஒரு பதிவு இதற்கு என்ன ஆச்சு என்று அவருடைய ரசிகர்கள் குழம்பி அக்கரையோடு அவரே கேட்டு ஆறுதல் கூறி வருகின்றனர்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கொரோனா பணக்காரனை பெரிய பணக்காரனாகவும், ஏழையை பிச்சைக்காரனாக மாற்றும்.
எவனாவது ஹிரோஷிமா நாகசாகியில் போட்ட மாதிரி உலகத்தை ஒரேயடியாக பாம்போடு அளித்தால் நல்லாயிருக்கும்.
வாழ்க வளமுடன் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இவர் தற்போது ” மழை படிக்காத மனிதன் “என்ற படத்தில் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



