எரிவாயுவின் தரம் தொடர்பில் இன்றுமுதல் ஆராய நடவடிக்கை.

0

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சமையல் எரிவாயு வினை துறைமுகத்திற்கு கொண்டு வருவதற்கு முன்னர் கப்பலில் வைத்து அதன் தரம்தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த செயற்பாடு இன்று முதல் நடைமுறைக்கு வரும் என்று இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சந்தைக்கு விநியோகிப்பதற்கு முன்னர் சமையல் எரிவாயு மற்றும் அதன் கொள்கலன்கள் குறித்து அதனுடன் தொடர்புடைய நிறுவனத்தினால் இன்று முதல் ஆராயப்படவுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சமையல் எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் சில நேற்றைய தினம் பதிவாகியுள்ளது.

இருப்பினும் குறித்த வெடிப்பு சம்பவங்களில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply