இலங்கையில் தற்போது மீண்டும் கொவிட் தொற்றின் தாகம் அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் புத்தாண்டு காலப்பகுதியில் பொருட் கொள்வனவில் ஈடுபடுவார்கள் சுகாதார நடைமுறையினை உரிய வகையில் பேணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 744 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர்கள் அனைவரும் புது வருட கொத்தணி யுடன் தொடர்புடையவர்கள் என அரச தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இதுவரைகாலமும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,64,733 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.