காவல்துறை அதிகாரிகளை தாக்கிய 6 பேர் அதிரடி கைது.

0

கிளிநொச்சியில் காவல்துறை அதிகாரிகளை தாக்கிய குற்றச்சாட்டில் ஆறு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய குறித்த நபர்கள் இராஜகிரியவில் வைத்து நுகேகொடை, மேல் மாகாணத்தில் வைத்து தெற்கு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் கடந்த ஒக்டோபர் 4ஆம் திகதி இடம்பெற்ற மோதல் ஒன்றின் போதே இவர்கள் காவல்துறை அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த அதிகாரி ஒருவரையும் தாக்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த குறித்த 6 பேரும் இவ்வாறு சுமார் ஒன்றரை மாதங்களின் பின்னர் இராஜகிரியவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply