இலங்கையில் 10 மணி நேர நீர் வவெட்டு அமுல்.

0

இலங்கையில் 10 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய களுத்துறை மாவட்டத்தில் சில பகுதிகளிலே குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் திருத்தணி காரணமாகவே இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படுகின்றது.

இதனடிப்படையில் இன்று காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரையில் இந்த நீர் வெட்டு அமுலில் இருக்கும்.

இதன் பிரகாரம் வாத்துவ, வஸ்கடுவ, பொதுப்பிட்டிய , களுத்துறை வடக்கு மற்றும் தெற்கு, கட்டுருந்த, நாகொட, பிலமினா வத்தை, போம்புவல ஆகிய பகுதிகளிலே இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் பாயகல, மக்கொன, பேருவளை, மொரகல்ல, களுவாமோதர, தர்காவுடன், அளுத்கம மற்றும் பெந்தோட்டை ஆகிய பகுதிகளுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply