யாழில் அதிகரித்து வரும் டெங்கு நோய்.

0

இலங்கையில் தற்போது டெங்கு நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் யாழ் மாவட்டத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது.

கடந்த மூன்று வாரங்களில் மாத்திரம் யாழ் மாவட்டத்தில் சுமார் 21 பேர் வரையில் டெங்கு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் சி . ஜமுனானந்தா தெரிவித்துள்ளார்.

மேலும் யாழ்ப்பாணம், நல்லூர், கோப்பாய், சண்டிலிப்பாய், வேலணை, தெல்லிப்பழை, பளை போன்ற பிரதேசங்களை சேர்ந்தவர்களே சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply